149
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மிகுந்த நேர்மைத் தன்மையுடன் செயற்படுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் குறித்த துறைகள் தொடர்பில் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டே அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில ளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ரன்மினிதென்ன டெலி சினிமா கிராமம் தொடர்பில் சபையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்