காசாவில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக காணாமல்போன இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளதாக, இஸ்ரேல் பொலிஸ் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த 07ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர் அனுலா ரத்நாயக்க என்ற இலங்கைப் பெண் காணாமல் போனதாகவும், ஆனால் அவர் உயிரிழந்ததை அந்நாட்டு பொலிஸ் திணைக்களம் நேற்று (17) உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். களனி, எரியவட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த திருமதி அனுலா ரத்நாயக்கவின் சடலம் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது. இதன் பின்னர் சடலம் அடையாளம் காணப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படுமெனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.