207
மாத்தளை மாவட்டத்தில் நிககொள்ள கிராமத்திலுள்ள அம்வான் அமைப்பின் அனுசரணையுடன் பாடசாலை மாணவர்களுக்கு வழிகாட்டல் தெளிவூட்டும் மாதாந்த நிகழ்ச்சி நிககொள்ள ஜும்ஆப் பள்ளிவாசலில் மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரை இடம்பெற்று வருகிறது.
இதற்கமைய நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் அஷ்ஷெய்க் பயாஸ் அஹ்மத் மௌலவி கலந்து கொண்டு ‘அந்நிய கலாசாரமும் சமூக சீர்கேடும்’ எனும் தொணிப்பொருளில் சொற்பொழிவு ஆற்றினார். இந்நிகழ்வில் பெருந்திரளான மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
(மாத்தளை சுழற்சி நிருபர்)