இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 18 பிரதேச செயலகப் பிரிவுகளில் 16 பிரிவுகளில் மண் சரிவு அபாய நிலைமை இருப்பதாக தேசிய கட்டட பரிசோதனை நிலையம் அறிவித்துள்ளது. இந்த அறிவுறுத்தல் மீண்டும் அறிவுரை வழங்கும் வரை அமுலில் இருக்கும் என இரத்தினபுரி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரி-எலபாத-குருவிட- எஹலியகொடை- மற்றும் கலவான பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவு அபாய நிலைமை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாய நிலைமை இருப்பதாக இந்தப் பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் மண் சரிவு அவதானம் உள்ள பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு நிவிதிகல-ஓப்பனாயக்க-வெலிகேபொல-பலாங்கொடை-இம்புல்பே-அயகம-கஹவத்த-பெல்மதுளை-கிரியெல்ல-கொடகவெல-கொலன்ன ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
( பலாங்கொடை தினகரன் நிருபர்)