Home » வவுனியாவில் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பம்

வவுனியாவில் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பம்

by mahesh
October 18, 2023 7:40 am 0 comment

வவுனியாவில் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் தற்சமயம் இச்செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 15வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டின் இரண்டாம் கட்ட கட்டடங்களை நிரல்படுத்தும் இச்செயற்றிட்டமானது நாடளாவியரீதியில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.

இச்செயற்பாடுகளுக்காக மாவட்ட செயலாளரின் வழிகாட்டலில் நிரல்படுத்தும் உத்தியோகத்தர்களாக கிராம சேவையாளர்கள் மற்றும் ஏனைய வெளிக்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டடங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று அதில் வசிக்கும் நபர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக, வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் இச்செயற்பாடானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

(வவுனியா விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT