Friday, April 19, 2024
Home » க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாதத்தில்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாதத்தில்

by sachintha
October 17, 2023 6:11 am 0 comment

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வெளியிட உத்தேசித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேற்படி பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், பெறுபேறுகளை கணினி மயப்படுத்தும் நடவடிக்கைகள் இந்நாட்களில் இடம் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது.

அதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை, 45 தினங்களுக்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையுடன் சம்பந்தப்பட்ட வினாத்தாள்களை பரீட்சைக்குப் பின்னர், சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடுவதற்கு முயன்ற நபர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT