21 வருடங்களுக்குப் பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் பெற்றுக்கொடுத்த தருஷி கருணாரத்ன என்ற மாணவிக்கு ஒலிம்பிக் வரை செல்வதற்கு தேவையான நிதியை தொடர்ச்சியாக பெற்றுக்ெகாடுப்பதற்கு அரலிய குறூப் நிறுவனத்தின் தலைவர் டட்லி சிறிசேன முன்வந்துள்ளார்.
அந்தத் தகவலை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தருஷி கருணாரத்னவைப் பாராட்டும் நிகழ்வொன்று தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, விக்கிரமாராட்சி நிறுவனத்தின் தலைவர் மிகிர விக்கிரமாராட்சி தர்ஷி கருணாரத்னவின் போஷாக்கு மற்றும் சுகாதார நிலைமையை பலப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்ெகாண்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார். அதேவேளை, தேசிய சொத்தான வீராங்கனை தருஷி கருணாரத்னவை பாதுகாத்து அவரைப் போஷிப்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியிலும் நடவடிக்ைககள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
சீனாவின் கென்சோ நகரில் இம்முறை நடைபெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீற்றர் பெண்களுக்கான ஓட்டப்போட்டியில் தருஷி கருணாரத்ன இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்