இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஏனைய நாடுகளில் அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிக வேகமாக இடம்பெற்றுவருவதாக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுக்கு இணையாக மொரோக்கோவின் மராகேஷில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை பல சிரமங்களை எதிர்கொண்ட போது, அது ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தது. எனினும், கொவிட்19 பரவல் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நிலை வீழ்ச்சியடைந்ததுடன் குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கை மாறியது. எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கை மிகவும் சிறந்த மற்றும் விரைவான தீர்மானங்களை எடுத்துவருவதாகவும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.