221
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் நேற்று இடம் பெற்றதுடன் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 956 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எந்த வித சிக்கல்களும் இன்றி பரீட்சை நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவிய போதும் மாணவர்கள் ஆர்வத்துடன் உரிய நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம், ஏ.எம். ஜாவிட் )