Friday, March 29, 2024
Home » நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளை முதல் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளை முதல் மழை

- ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ பகுதிகளில் 75 மி.மீ. பலத்த மழை

by Rizwan Segu Mohideen
October 13, 2023 9:13 am 0 comment

– சில பிரதேசங்களில் முற்பகலிலும் சிறிதளவில் மழை

இன்றையதினம் (13) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காலி, மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மேல் மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT