மீன்பிடி படகொன்றின் மூலம் 4 வருடங்களுக்கு முன்னர் நாட்டுக்குள் போதைப்பொருளை கொண்டு வந்தமை மற்றும் விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக் கொண்ட ஈரான் பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேற்படி குற்றவாளிகளால் 80 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டது. தமது குற்றத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதையடுத்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரனராஜா அவர்களுக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதித்துள்ளார்.
இப்பிரதிவாதிகள் இலங்கையில் செய்துள்ள சர்வதேச
உடன்படிக்கைக்கிணங்க, சிறைத்தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்காக அவர்களை ஈரானுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)