Home » மலையக மகளிர் மன்ற விழாவில் இந்திய பேச்சாளர் பங்கேற்பு

மலையக மகளிர் மன்ற விழாவில் இந்திய பேச்சாளர் பங்கேற்பு

by sachintha
October 13, 2023 10:44 am 0 comment

மலையக மகளிர் மன்றத்தின் 20ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி, இல78 , இலங்கை சுற்றுலா சபை கேட்போர் கூடத்தில் இன்று (13) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்ற கலாநிதி ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் இந்தியாவில் இருந்து நேற்று இலங்கை வந்தடைந்தார்.

அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் மன்றத்தலைவி திருமதி. புஸ்பராணி பாலகிருஷ்ணன் தலைமையில் திருமதி உதயா தங்கராஜ், திருமதி கீதா ராமராஜ், திருமதி பிரியா கார்த்திக் ஆகியோர் வரவேற்றனர்.

(படப்பிடிப்பு :- எஸ். எம். சுரேந்திரன்)

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT