Thursday, March 28, 2024
Home » SLPP யிலிருந்து சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணையலாம்

SLPP யிலிருந்து சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணையலாம்

தேர்தல்களுக்கும் தயாராகவே இருக்கிறோம்

by gayan
October 12, 2023 7:28 am 0 comment

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுடன் இணைந்து செயற்பட்டு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துள்ளோர் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ வுடன் (10) சந்திப்பொன்று நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்

கூறியதாவது: கட்சி என்ற ரீதியில் பலமாகச் செயற்படுகின்றோம். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு தயாராகவே உள்ளோம். இதற்கான நடவடிக்கைகளைத் தற்போது முன்னெடுத் துள்ளோம். தேர்தல்களில் கட்சியின் கொள்கையை முன்னிலைப்படுத்திச் செயற்படுவோம். பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் தரப்பினரும் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம். அதற்குக் காலவகாசம் வழங்கப்படும். சகல தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் தோற்றம் பெற்றுள்ளது. 2024 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT