Friday, March 29, 2024
Home » பல்துறை கலைஞன் ஜக்சன் அந்தனியின் இறுதிக் கிரியை இன்று

பல்துறை கலைஞன் ஜக்சன் அந்தனியின் இறுதிக் கிரியை இன்று

by gayan
October 12, 2023 7:42 am 0 comment

இலங்கையின் பல்துறைகளிலும் திறமை காட்டிய கலைஞனான ஜக்சன் அந்தனியின் இறுதி கிரிகைகள் ராகம புனித பேதுரு பாவுலு தேவாலயத்தில் இன்று (12) நடைபெறவுள்ளது.

பொரளை தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் அவரது பூதவுடல் கடவத்த ராகம வீதி, இலக்கம் 90A , 58 இல்லத்திற்கு நேற்று (11) கொண்டுவரப்பட்டதோடு இறுதி அஞ்சலிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்தது.

அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்ததோடு அவர்களிடையே கலைஞர்கள் அரசியல்வாதிகள் மதத் தலைவர்கள் உள்ளிட்ட ரசிகர்களும் அடங்கினர். இறக்கும் போது அவருக்கு வயது 65. அவர் அநுராதபுரம், தலாவ வீதியில் மொரகொடயில் விபத்துக்குள்ளாகி ஒரு வருடம் இரண்டு மாதங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நீண்ட நாட்களுக்குப்பின் சிகிச்சை பலனின்றி அவர் மரணமானார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT