Home » புதிய Whistle blowing விதிமுறை அறிமுகம்

புதிய Whistle blowing விதிமுறை அறிமுகம்

SLT-Mobitel நிறுவனத்தில்

by gayan
October 12, 2023 6:00 am 0 comment

SLT-Mobitel நிறுவனம் சூழல் சமூகம் மற்றும் கொள்கைகளை வலுப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட Whistle blowing என்ற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் ரியாஸ் மிஹூலர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், சுயாதீன Whistle blowing குழு,டெலிகொம் நிறுவனத்தின் உயர்தரம் வாய்ந்த செயற்பாடுகளுக்கான அர்ப்பணிப்புக்களுக்கு எடுத்துக் காட்டாக அமைவதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்பதன் அடிப்படையான அம்சங்கள் தொடர்பில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

அந்த வகையில் நிறுவனத்தில் இடம்பெறும் பாரதூரமான தவறான செயற்பாடுகளை அறிவிப்பவர்களுக்கு பாதுகாப்பான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அது அமைந்துள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

மேற்படி பக்கசார்பற்ற Whistle blowing செயற்குழுவில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிதியியல் பீட முகாமைத்துவப் பேராசிரியர் பவித்ரா கைலாசபதி, தொழில் வழங்குநர் சம்மேளனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கோட்டாபய திசாநாயக்க உள்ளிட்ட பலரும் உள்ளடங்குகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT