Home » எரிபொருள் பவுஸரின் சில்லுக்குள் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழப்பு

எரிபொருள் பவுஸரின் சில்லுக்குள் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழப்பு

அநுராதபுரம் தலாவையில் கோரச் சம்பவம்

by gayan
October 12, 2023 6:40 am 0 comment

(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)

அநுராதபுரம், தலாவ நகர மத்தியில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் (10) எரிபொருள் பவுசர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் பத்து வயது சிறுமி ஸ்தலத்தில் பலியானார்.

அநுராதபுரம் பாதனிய வீதியில்

தலாவ நகர மத்தியில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் பவுசர் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியது. இவ்விபத்தில் தலாவ ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் தலாவ கரகஹவெவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய டபிள்யூ. நிசல்யா நெத்சரனி விமலசேன என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இவர், இம்முறை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்தவரென பொலஸொர் தெரிவித்தனர். விபத்து நேற்றுமுன்தினம் இரவு (10) 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலாவ போக்குவரத்து பொல ஸார் தெரிவித்தனர்.

கொழும்பு சப்புகஸ்கந்தவிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த எரிபொருள் பவுசர், தலாவ நகரில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் வலது பக்கமாக சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. அந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் சிறுமியும் அவரது தாயும் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் பவுசருடன் மோதியவுடன் சிறுமி விழுந்து பவுசர் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமுற்றனர். இதையடுத்து இருவரும் தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நேரத்தில் சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT