Thursday, March 28, 2024
Home » தெஹிவளையில் சுற்றிவளைப்பு ஆறு வாள்களுடன் நால்வர் கைது

தெஹிவளையில் சுற்றிவளைப்பு ஆறு வாள்களுடன் நால்வர் கைது

by damith
October 10, 2023 7:50 am 0 comment

தெஹிவளை தர்மபாலராம வீதியிலுள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்து சோதனையிட்ட விஷேட அதிரடிப்படையினர், கூரிய ஆயுதங்களுடன் நால்வரை கைது செய்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் களுபோவில முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர், இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது, 20 மில்லிகிராம் ஹெரோயின் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து சந்தேக நபர் வசிக்கும் வீட்டை படையினர் சோதனையிட்டனர்.அங்கிருந்த மூவரைக் கைதுசெய்த விஷேட அதிரடிப்படையினர், வீட்டிலிருந்த ஆறு வாள்களை கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT