Thursday, April 25, 2024
Home » பத்து நாட்களுக்குள் அகற்றி புதிய பாலத்திற்கு தற்காலிக ஏற்பாட்டை செய்யவும்

பத்து நாட்களுக்குள் அகற்றி புதிய பாலத்திற்கு தற்காலிக ஏற்பாட்டை செய்யவும்

by damith
October 10, 2023 6:30 am 0 comment

கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திலுள்ள பழுதடைந்த பயணிகள் மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய பாலம் அமைக்கும் பணியை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னவுக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இதுகுறித்து அறிவித்துள்ளார்.

பயணிகளின் வசதி கருதி, பத்து நாட்களுக்குள் தற்காலிக பிரவேச வீதியொன்றை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள மேம்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணியை ஐந்து மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர தேவையாக கருதி அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்திற்கு இது தொடர்பான பணியைக் கையளிக்குமாறும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT