Home » மாத்தறை மாவட்டத்தில் கடும் வெள்ளம்; 11,692 பேர் இடம்பெயர்வு

மாத்தறை மாவட்டத்தில் கடும் வெள்ளம்; 11,692 பேர் இடம்பெயர்வு

by damith
October 10, 2023 9:17 am 0 comment

மாத்தறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் 6,301 குடும்பங்களைச் சேர்ந்த 11,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 11 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுல், மாத்தறை திஹகொட, கம்புறுப்பிட்டிய, மாலிம்பட, அதுரெலிய, தெவிநுவர, திக்வெல்ல ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்களாவர். தொடர்ந்து 12 தினங்களாக இவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முடங்கப்பட்டுள்ளனர். மேலும் மாத்தறையிலிருந்து அகுரஸ்ஸ, கம்புறுப்பிட்டிய, ஹக்மன, கத்துவ, தெய்யந்தர, ஊருபொக்க மற்றும் அகுரஸ்ஸ கம்புறுப்பிட்டிய பகுதிகளுக்கு செல்லும் வீதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் வீடுகளும், வியாபார நிலையங்களும் சேதமாகியுள்ளன.

(வெலிகம தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT