Wednesday, April 17, 2024
Home » ஒட்சிசன் குறைந்ததால் மீன்கள் உயிரிழப்பு

ஒட்சிசன் குறைந்ததால் மீன்கள் உயிரிழப்பு

by damith
October 10, 2023 5:55 am 0 comment

அநுராதபுரத்தின் புறநகர் பகுதியான கும்பிச்சங்குளம் ஏரியில் மீன்கள் செத்து மடிவதற்கு பாசிகள் வளர்ந்து தேவையான அளவு ஒட்சிசன் குறைந்ததே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. ஏரியில் நீர்மட்டம் குறைந்ததாலும், பாசிகள் பெருகியதாலும், ஏரியில் மீன்கள் அதிகமாக இருப்பதால், தேவையான அளவு ஒட்சிசன் குறைவதால் மீன்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ருவன் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களாக குறிப்பிட்ட இக்குளத்தில் உள்ள அதிகமான மீன்கள் செத்து கரை ஒதுங்கும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கடந்த காலங்களில் இக் குளத்தில் இலட்சக்கணக்கான மீன் குஞ்சுகள் விடப்பட்டு அவை நன்றாக வளர்ச்சிகண்ட நிலையில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

திறப்பனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT