152
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால், 12,120 குடும்பங்களைச் சேர்ந்த 48,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் மட்டும் 09,489 குடும்பங்களைச் சேர்ந்த 38,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மாகாணத்தில் 02,117 குடும்பங்களைச் சேர்ந்த 8,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.