Friday, April 19, 2024
Home » தொடர் மழையால் சிறுவர்கள் மத்தியில் நோய்கள் பரவும் ஆபத்து

தொடர் மழையால் சிறுவர்கள் மத்தியில் நோய்கள் பரவும் ஆபத்து

- பெற்றோருக்கு Dr.தீபால் எச்சரிக்கை

by sachintha
October 6, 2023 7:13 am 0 comment

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக, சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ” அண்மைக் காலமாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதோடு சுவாசம் சம்பந்தமான நோய்களும் ஏற்பட்டு வருகின்றன. சிறுவர்களின் உடல் பருமன் மேலும் அதிகரித்து வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் சுத்தமான நீர் மற்றும் உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.

இதன்மூலம் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT