Friday, March 29, 2024
Home » வெள்ளை மாளிகையிலிருந்து பைடனின் நாய் வெளியேற்றம்

வெள்ளை மாளிகையிலிருந்து பைடனின் நாய் வெளியேற்றம்

by sachintha
October 6, 2023 1:59 pm 0 comment

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நாய் பல ஊழியர்களைக் கடித்ததால் அது வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் பேச்சாளர் அந்த விபரத்தை வெளியிட்டார். கமாண்டர் என்ற 2 வயதான அந்த நாய் ஜெர்மன் ஷெபர்ட் வகையைச் சேர்ந்ததாகும். அது இப்போது எங்கே உள்ளது என்று தெரியவில்லை.

2021ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகைக்கு வந்த அது, அமெரிக்க உளவுச் சேவைப் பிரிவில் பணியாற்றும் 11 அதிகாரிகளைக் கடித்துள்ளது. அதனிடம் கடி வாங்கிய ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று சி.என்.என் செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஏனெனில் நாய் வெள்ளை மாளிகையின் மற்ற ஊழியர்களையும் கடித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மனைவியும் ஊழியர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள் என்று அவர்களின் பேச்சாளர் எலிசபெத் அலெக்சாண்டர் தெரிவித்தார்.

கமாண்டர் கடைசியாக கடந்த மாதம் 30ஆம் திகதி வெள்ளை மாளிகையில் காணப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT