2030 உலகக் கிண்ண கால்பந்து போட்டி மூன்று கண்டங்களில் மொத்தம் ஆறு நாடுகளில் நடைபெறும் என்பதை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) உறுதி செய்துள்ளது.
போட்டியை நடத்தும் நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ அறிவிக்கப்பட்டிருப்பதோடு உருகுவே, ஆர்ஜன்டீனா மற்றும் பரகுவேவில் ஆரம்ப மூன்று போட்டிகளும் நடைபெறவுள்ளன.
உருகுவே தலைநகர் மொன்டவீடியோவில் முதலாவது உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்று 100 ஆண்டுகளை கொண்டாடும் வகையிலேயே தென் அமெரிக்காவில் ஆரம்ப மூன்று போட்டிகளும் நடைபெறவுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற பிஃபா மாநாட்டில் எடுத்த தீர்மானத்தை உறுதி செய்வதாகவே இந்த முடிவு உள்ளது. தொடர்ந்து எஞ்சிய 48 போட்டிகளும் வட ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் நடத்தப்படவுள்ளன.
இதேவேளை 2034 இல் பிஃபா உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கு சவூதி அரேபியா முதல் முறை விண்ணப்பித்துள்ளது.