பாலமுனை டைட்டன் விளையாட்டுக்கழகத்தினால் நடத்தப்பட்ட மென்பந்து மின்னொளி கிரிக்கெட் சுற்று போட்டியில் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு றஹ்மிய்யா விளையாட்டுக் கழக அணி கிண்ணத்தை வென்றது.
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த புதன்கிழமை (04) கழகத்தின் தலைவர் எம்.ஐ. ஹம்சா தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இறுதிப் போட்டியில் றஹ்மிய்யா அணி 62 ஓட்டங்களை நிர்ணயித்த நிலையில் பள்ளிக்குடியிருப்பு யங்மேன் விளையாட்டுக் கழக அணியினர் 50 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 12 ஓட்டங்களால் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்