Friday, April 26, 2024
Home » சம்பியனானது றஹ்மிய்யா அணி

சம்பியனானது றஹ்மிய்யா அணி

by sachintha
October 6, 2023 11:53 am 0 comment

பாலமுனை டைட்டன் விளையாட்டுக்கழகத்தினால் நடத்தப்பட்ட மென்பந்து மின்னொளி கிரிக்கெட் சுற்று போட்டியில் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு றஹ்மிய்யா விளையாட்டுக் கழக அணி கிண்ணத்தை வென்றது.

பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த புதன்கிழமை (04) கழகத்தின் தலைவர் எம்.ஐ. ஹம்சா தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இறுதிப் போட்டியில் றஹ்மிய்யா அணி 62 ஓட்டங்களை நிர்ணயித்த நிலையில் பள்ளிக்குடியிருப்பு யங்மேன் விளையாட்டுக் கழக அணியினர் 50 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 12 ஓட்டங்களால் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT