பலாங்கொடை இ.போ.ச டிப்போவினால் பாடசாலை மாணவர்களுக்கான சீசன் டிக்கெட் வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாகப் பிரதேச பாடசாலை மாணவர்கள் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
சீசன் டிக்கெட் தாமதமாகும் தினங்களில் மாணவர்கள் பலர் அதிக பணத்தை செலவிட்டு இ.போ.ச மற்றும் தனியார் பஸ்களில் பாடசாலைக்கு சென்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் தற்போது எதிர்நோக்கும் பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் சீசன் டிக்கெட் கிடைக்காததால் ஏற்படும் மேலதிக செலவையும் சமாளிப்பது கஷ்டமாக இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இவ்வாறான வீண் தாமதங்கள் ஏற்படாது மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் சீசன் போக்குவரத்து சலுகையில் பாதிப்பினை ஏற்படுத்தாது டிப்போ நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என இவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்