463
முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் நேற்று (04) இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 8.30 மணியளவில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே 34 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் இன்று (05) நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
ஓமந்தை விஷேட நிருபர்