Friday, March 29, 2024
Home » இந்திய உயர்ஸ்தானிகருடன் வடமாகாண ஆளுநர் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகருடன் வடமாகாண ஆளுநர் சந்திப்பு

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

by gayan
October 5, 2023 7:55 am 0 comment

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை, கொழும்பிலுள்ள இந்தியா இல்லத்தில் சந்தித்துள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை
நடைபெற்ற இச்சந்திப்பில், வடக்கின் எதிர்கால அபிவிருத்தி குறித்து, தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கமளித்துள்ளார். அதேவேளையில், இந்திய அரசாங்கம் கடந்த காலங்களில் வழங்கிய ஆதரவுக்கு தமது நன்றியையும் தெரிவித்தார். உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வட மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் வடக்கின் அபிவிருத்திக்கும் தங்களது தொடர்ச்சியான ஆதரவு தொடருமென்றும் உறுதியளித்தார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT