Thursday, March 28, 2024
Home » முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்; யாழில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்; யாழில் மனித சங்கிலி போராட்டம்

- நீதி தேவதையிடம் மண்டியிட்ட சட்டத்தரணிகள்

by Prashahini
October 4, 2023 12:44 pm 0 comment

– புகைப்படம் எடுத்த பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களை பொலிஸார் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்தனர்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்று (04) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது கொக்குவில் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டோர், நீதி தேவதையின் உருவ சிலைக்கு கறுப்புத் துணி கட்டி , நீதி தேவதையின் கையில் உள்ள தராசு ஒரு பக்கமாக தாழ்ந்து இருக்க கூடியவாறு , நீதி தேவதையின் உருவ சிலையை காட்சிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

அதன்போது வீதியில் போக்குவரத்து ஒழுங்குகளை சீர் செய்யாது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதில் போக்குவரத்து பிரிவு பொலிஸார் ஆர்வமாக ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT