Friday, March 29, 2024
Home » 35 கிலோ ஹசீஸ் போதை சுங்க அதிகாரிகளால் மீட்பு

35 கிலோ ஹசீஸ் போதை சுங்க அதிகாரிகளால் மீட்பு

இத்தாலியிலிருந்து அனுப்பப்பட்டதாக உறுதி

by mahesh
October 4, 2023 7:30 am 0 comment

42 மில்லியன் ரூபா பெறுமதியான 35 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் உறுகொடவத்தை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவின் பரிசோதனை கூடத்தில், கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார். இவை, ஐந்து பார்சல்களாக தயாரிக்கப்பட்டு, இத்தாலியிலிருந்து கட்டுநாயக்க விமான சரக்கு முனையத்துக்கு விமான அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான இந்த பார்சல்கள், உறுகொடவத்தை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவின் பரிசோதனைக் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இந்த பார்சல்களை அனுப்ப வேண்டிய முகவரிகள் எதுவும் இருக்கவில்லை. பார்சல்களில் உரிமையாளர்களின் தொலைபேசி எண்கள் மட்டுமே உள்ளன.

ஹசீஸ் போதைப்பொருளை கைப்பற்றிய சுங்க வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள், மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் கையிருப்பை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT