Friday, April 26, 2024
Home » தவறாக செயற்படும் சமூக ஊடகங்களை நசுக்காது கட்டுப்படுத்துவது அவசியம்

தவறாக செயற்படும் சமூக ஊடகங்களை நசுக்காது கட்டுப்படுத்துவது அவசியம்

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார

by mahesh
October 4, 2023 7:00 am 0 comment

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல. இருப்பினும் சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதே இன்று எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை. எனவே, இதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் அவசியமாகும். அதுவே இந்த சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல. இருப்பினும் எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதாகும். இதனை தவறாக பயன்படுத்துவதாலே, இளைஞர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குடும்ப பிணைப்புகளிலிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களூடாக மதங்களுக்கும் சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். எனவே, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தல், பிரச்சினைகளை உருவாக்கல், அல்லது ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை தோற்றுவிக்கும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் அவசியமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT