Thursday, April 18, 2024
Home » இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருக்கு ‘தேச கெளரவ புத்ர’ விருது

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருக்கு ‘தேச கெளரவ புத்ர’ விருது

by mahesh
October 4, 2023 2:30 pm 0 comment

அநுராதபுரம் மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சஜீர் ‘தேச கெளரவ புத்ர’ விருது வழங்கி அண்மையில் கௌரவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலையரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் மகா சங்கத்தினரால் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மல்வத்து பீட மகா நாயக்க அதிபூஜ்ய காலி கோரல, அதி பூஜ்ய மகா விகார வங்சிக சியாமபாளி வனவாய நிகாய அதி கெளரவ அனுநாயக்க, காலி கடவத் மற்றும் பெந்தர வல்லாவிட உப சங்க நாயக்க ஆகியோரது கையொப்பத்துடன் இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 80 பேர் அளவில் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் மதிப்புக்குரிய மகா சங்கத்தினர், ஊடகவியலாளர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வைத்தியர்கள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கெக்கிராவ குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT