சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மரீனா ஆப்தீன் பசீரின் ஏற்பாட்டில் தெஹிவளை பிரேசர் எவனியு பாக்கில் சிறுவர் மற்றும் முதியோர் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதன்போது 5 தொடக்கம் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கும் 60 தொடக்கம் 80 வயதிற்கு இடைப்பட்ட முதியோருக்கும் சித்திரப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொட்டும் மழையினையும் பாராது பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சித்திரப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் இதன்போது வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சுனேத்ரா ரணசிங்க, மாநகர சபையின் பிரதி ஆணையாளர் திருமதி அனுஸா, முன்னாள் உறுப்பினர் குமார கோமஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஏ.எஸ்.எம்.ஜாவித்