Saturday, April 20, 2024
Home » நாவலப்பிட்டி தோட்டப்புறங்களில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு

நாவலப்பிட்டி தோட்டப்புறங்களில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு

by mahesh
October 4, 2023 9:34 am 0 comment

நாவலப்பிட்டி பகுதியிலுள்ள தோட்டப்புறங்களில் பாடசாலை இடைவிலகங்கள் அதிகரித்துவருவதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

தோட்டப்புற பாடசாலைகளில் 30சதவீதத்துக்கும் அதிகமான பாடசாலை இடைவிலகல் சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாவலப்பிட்டி நகரை அண்டிய தமிழ் பாடசாலையை தரமுயர்த்தி அப்பாடசாலைக்கு சகல வளங்களையும் வழங்கிய போதும் கடந்த சில மாதங்களாக மாணவர்கள் வருகை குறைந்துள்ளது. மேலும் இப்பாடசாலையில் மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளில் தரம் குறைந்த நிலையில் உள்ளது. அதற்கு ஆசிரியர் பற்றாக்குறை முதற்காரணம். அரசாங்கம் அனுமதி வழங்கினால் இப்பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறை நீக்க நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்தார்.

(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT