Saturday, April 20, 2024
Home » அக்டோபர் மாதத்திற்கான திருத்த அறிவிப்பு இன்று
எரிபொருள் விலைச் சூத்திர நடைமுறை;

அக்டோபர் மாதத்திற்கான திருத்த அறிவிப்பு இன்று

நள்ளிரவு முதல் மேற்கொள்ளத் தீர்மானம்

by damith
October 2, 2023 6:00 am 0 comment

விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று (02) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விலை திருத்தம் இன்று இரவு அறிவிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. விலைச் சூத்திரத்தின் படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலை திருத்தம் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

விலை சூத்திரத்தின்படி, கடந்த மாதம் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது. இதேவேளை, இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தமும் ஒக்டோபர் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT