Thursday, April 25, 2024
Home » உலகக் கிண்ணத்திற்கு முன்னரே ஓய்வு முடிவை அறிவித்தார் ஷகீப்

உலகக் கிண்ணத்திற்கு முன்னரே ஓய்வு முடிவை அறிவித்தார் ஷகீப்

by Rizwan Segu Mohideen
September 30, 2023 12:50 pm 0 comment

பாகிஸ்தானில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகீப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்குப் பின்னர் தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வு முடிவை அறிவிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 2024 டி20 உலகக் கிண்ணத்திற்குப் பின் டி20 போட்டிகளில் ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாக குறிப்பிட்ட ஷகீப் அல் ஹசன் டெஸ்ட் போட்டிகளில் விரைவில் தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக கூறினாரர்.

“நான் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஒன்றன்பின் ஒன்றாக ஓய்வு பெறுவேன். எனது ஓய்வு முடிவை 2025 ஆம் ஆண்டு சம்பியன் கிண்ண தொடருக்குப் பின் அறிவிப்பேன். இந்த உலகக் கிண்ண தொடர் வரை மட்டுமே நான் பங்களாதேஷ் அணியின் தலைவராக செயல்படுவேன். அதன்பின் தலைமை பொறுப்பில் இருக்க மாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT