Friday, April 19, 2024
Home » பெரியவிளான் றோ.க.த.பாடசாலையில் திறன் வகுப்பறை திறந்து வைப்பு

பெரியவிளான் றோ.க.த.பாடசாலையில் திறன் வகுப்பறை திறந்து வைப்பு

by damith
October 2, 2023 12:56 pm 0 comment

வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கமைவாக அனைத்துலக மருத்துவ நல அமைப்பு(IMHO-USA) மற்றும் இரட்ணம் பவுண்டேசன்(Ratnam Foundation-UK) அமைப்புக்களினால் முதலாம் கட்டத்தில் பன்னிரண்டு பாடசாலைகளிலும் இரண்டாம் கட்டத்தில் ஒன்பது பாடசாலைகளிலும் திறன் பலகையுடனான திறன் வகுப்பறைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இவற்றில் இரண்டாம் கட்டத்தில் வழங்கப்பட்ட ஒன்பது பாடசாலைகளில் ஒன்றான பெரியவிளான் றோ.க.த.பாடசாலையில் திறன்வகுப்பறையை திறந்து வைக்கும் நிகழ்வு சென்ற வாரம் மிகச்சிறப்பாக நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்வில் திறன்பலகை தொடர்பாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களினால் , மாணவர்களுடனான பங்குபற்றுதலுடன் வகுப்பறைச் செயற்பாடுகள் மிகவினைத்திறனான முறையில் நிகழ்த்தி காட்டப்பட்டிருந்தது. e class, white board,g compries மென்பொருட்களுடன் e thksalawa,NIE,DP போன்ற வலய அமைப்புக்களை பயன்படுத்தியது மட்டுமன்றி செயற்கைநுண்ணறிவு தொடர்பாக பயிற்சியின்போது வழங்கப்பட நுட்ப விடயங்களையும் தமது வகுப்பறைச் செயற்பாடுகளில் இவ் ஆசிரியர்கள் இணைத்திருப்பது இப்பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இவ் ஆரம்ப நிகழ்வுகளில் வலயபிரதிநிதிகளுடன், பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன் IMHO-USA அமைப்பின் வதிவிட பணிப்பாளர் திரு.சு. கிருஷ்ணகுமார் அவர்களும் கலந்து கொண்டு ஆசிரியர்களை நெறிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT