அடுத்த பாப்பரசரை நியமிக்கும் வாக்குரிமை பெற்ற கருதினால் பதவிக்கு பாப்பரசர் பிரான்சிஸ் மேலும் 21 பேரை நியமித்துள்ளார்.
வத்திக்கானின் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கடந்த சனிக்கிழமை (30) நடைபெற்ற நிகழ்விலேயே உலகெங்கும் இருந்து 21 புதிய கர்தினால்கள் நியமிக்கப்பட்டனர். ‘திருச்சபையின் இளவரசர்கள்’ என்று அழைக்கப்படும் கர்தினால்களில் இருந்தே புதிய பாப்பரசர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனங்களுடன் கர்தினால்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 73 வீதமானவர்கள் தற்போதைய பாப்பரசர் பிரான்சிஸினால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் 21 கர்தினால்களில் பதினெட்டு பேர் 80 வயதுக்கு குறைவானவர்களாவர். திருச்சபை சட்டத்தின்படி இவர்கள் புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் இராகசிய வக்கெடுப்புக்கு தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.