அநுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட புதுக்குளம் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயல் புதிய கட்டட திறப்பு விழா சனிக்கிழமை (30) மிக விமர்சையாக நடைபெற்றது.
அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அல்ஹிமா இஸ்லாமிய அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.நூருல்லாஹ் (நளீமி) இடம் விடுத்தவேண்டுகோளின் பேரில் குறித்த பள்ளிவாயல் குவைத் நாட்டு நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், அல்ஹிமா இஸ்லாமிய சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.நூருல்லாஹ் (நளீமி) ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக பரசன்கஸ்வெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.அன்வர்தீன் , கம்பிரிகஸ்வெவ மனாருல் உலூம் மகா வித்தியாலய அதிபர் ஜே.ஏ.ஆசாத் மொஹமட் , மத்திய நுவரகம் பிரதேச சபை முன்னால் எதிர்கட்சி தலைவர் ஜே.ஏ.முசாதிக் உட்பட பிரமுகர்கள் பலரும் . ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டதுடன், அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்