மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் பாடு மீன்களின் சமர் கிரிக்கெட் போட்டி மழை குறுக்கிட்டதால் இரு அணிகளுக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற 50 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடியதில் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை பெற்றது.
பதிலெடுத்தாடிய மட்டக்களப்பு மத்திய கல்லூரி அணி 2 விக்கெட் இழப்புக்கு 28 விக்கெட்டுகளை பெற்ற நிலையில் மழை குறுக்கிட்டது.
கல்லடி குறூப் நிருபர்