ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 20
நந்தன வருடம் ஆடி மாதம் 25ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,AUGUST, 09, 2012
வரு. 80 இல. 188

வடக்கு, கிழக்கில் தற்போது ஜனநாயக சுதந்திரத்துடன் மக்கள் வாழும் சூழல்

கொழும்பு சர்வதேச பாதுகாப்புக் கருத்தரங்கில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்'

* குறுகிய காலத்தில் பாரிய அபிவிருத்தி

*  உலகில் அமைதி, ஸ்திரத்தன்மையுள்ள நாடு இலங்கை

* 12,000 முன்னாள் புலிகளுக்கு முழுமையான புனர்வாழ்வு

அமைதியும், ஸ்திர தன்மையும் உள்ள இலங்கையில் வடக்கு, கிழக்கு மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை எவ் வித பிரச்சினைகளுமின்றி முழுமை யான ஜனநாயக சுதந்திரத்துடன் மேற் கொள்ள தேவையான வழிகள் ஏற் படுத்தப்பட்டு ள்ளது என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

விவரம் »

அனைத்து மாகாணங்களிலும் பாரிய அளவிலான விளையாட்டு நிலையங்களை அமைப்பதற்கு
நடவடிக்கை எடுப்பேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

வாக்குச் சாவடி கியூ வரிசைகளில் மாற்றம்

ஆண், பெண்களுக்கு புதிய அணுகுமுறை

மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களின் போது வாக்குச் சாவடிகளில் கியூ வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்த தேர்தல்கள் திணைக்களம் புதிய அணுகுமுறையொன்றினை கையாண்டிருப்பதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் கூறினார்.

விவரம் »

கிராமங்களின் அபிவிருத்திகளை மலையகத்திலும் முன்னெடுக்க திட்டம்

சப்ரகமுவவில் தமிழ் மக்களின் வாக்கு ஐ.ம.சு.முவுக்கே

சப்ரகமுவ மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ஐ.ம.சு.மு. கூடுதலான வாக்கு வீதத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

விவரம் »

மன்னாரில்

முஸ்லிம்கள் மீள்குடியேறுவதை தடுக்க புலி ஆதரவாளர் முயற்சி

புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதைத் தடுப்பதற்கு எஞ்சியுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் முயற்சி செய்து வருவதாக கைத்தொழில் அபிவிருத்தி வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் நேற்றுப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். இவ்விவகாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்....

விவரம் »