வாகன ஓட்டிகளுக்கு கடும் தண்டனை கொடுத்தால் வீதி விபத்துக்கள் குறையும்
வாகன ஓட்டிகளுக்கு கடும் தண்டனை
கொடுத்தால் வீதி விபத்துக்கள் குறையும்
நாட்டில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறைந்த பட்சம்
25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை காலை முதல் இரவு வரை வீதிப் போக்கு வரத்து பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
பொலிஸாரின் எண் ணிக்கை வாகனப் போக்குவரத்து பணிகளில்
கூடுதலாக ஈடுபடுத்தப் படுகின்ற போதிலும் நாட்டில் இப்போது நாளாந்தம் வீதி
விபத்துக்க ளினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இந்த வீதி விபத்து மரணங்கள் ஏற்படுவதற்கு காரணம் என்னவென்று பகு ப்பாய்வு செய்த ஒரு
அனுபவமிக்க பொலிஸ் அதிகாரி, வாகனங்க ளின் எண்ணிக்கை மட்டுமன்றி வீதிகள்
அகலப்படுத்தப்பட்டு ஒரே திசையில் ஏககாலத்தில் இரண்டு மூன்று வாகனங்கள் செல்லக்கூடிய
வசதி இருப்பதே வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என்று கூறினார்.
வாகனங்கள் இன்று அளவுக்கு அதிகமான வேகத்தில் ஓட்டப்படுகின் றன. இத்தகைய குற்றம்
புரிபவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய வர்களையே பொலிஸார் கண்டுபிடித்து,
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆயினும் நாளாந்தம் வீதி விதிகளை
மீறி வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பொலிஸாரின் கண்ணில் மண்ணை
தூவிவிட்டு தப்பித்து விடுகி றார்கள் என்று அவர் கூறுகிறார்.
இந்த வீதி விபத்து மரணங்களை கணிசமான அளவு குறைக்க வேண்டு மாயின் என்ன மாற்று வழி
இருக்கிறது என்று அந்த அனுபவமிக்க பொலிஸ் உத்தியோகத்தரிடம் கேட்ட போது, வீதி விதிகளை
மீறி வாகனங்களை அதிவேகமாக, கவனக் குறைவாக ஓட்டி விபத்துக் களை ஏற்படுத்தும்
சாரதிகளின் சமூக அந்தஸ்து, அரசியல் அதிகா ரம், பணப்பலம் ஆகிய எதனையும்
பொருட்படுத்தாமல் அவர்களு க்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து, கட்டாய சிறைத்தண்ட
னையை விதிப்பதுடன் அவர்களின் வாகனம் ஓட்டும் அனுமதிப்பத் திரத்தை வாழ்நாள் பூராவும்
இரத்து செய்ய வேண்டுமென்று சொன் னார்.
இவ்விதம் வீதி விபத்துக்களை தங்கள் கவனக்குறைவினால் ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளை
கடுமையாக தண்டித்து அவர்களின் வாகன ஓட் டும் அனுமதிப் பத்திரங்களை நிரந்தரமாக இரத்து
செய்தால் தான் மற் றவர்கள் வாகனங்களை அவதானமாக ஓட்டிச் செல்வார்கள். அதன் மூலம் பல
படுமோசமான விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம்.
வீதி விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதற்கு வாகன ஓட்டிகள் மட்டு மல்ல, பாதசாரிகளும் ஒரு
காரணமாகும். வீதிகளை கடப்பதற்கு மஞ் சள் கடவை இருக்கும் போது அவற்றை பயன்படுத்தாமல்
வீதியின் மற்ற இடங்களில் அவசரமாக கடந்து செல்ல எத்தணிப்பவர்கள் பெரும்
விபத்துக்களில் சிக்கி மரணிக்கிறார்கள்.
இதனை தடுப்பதற் காக வீதி ஒழுங்கை மீறி
நடுப்பாதையில் நடந்து செல்பவர்கள் அல் லது பாதைகளை பாதுகாப்பற்ற இடங்களில் கடப்பது
போன்ற குற்றம் புரிந்த சுமார் 500 பாதசாரிகளுக்கு எதிராக பொலிஸார் இப்போது சட்ட
நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்கள் கடந்த ஒரு வார கால த்தில் குற்றம் இழைத்தவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் கடவையை உதாசீனம் செய்து அவ்விடத்தில் பாதசாரிகளுக்கு கடந்து செல்வதற்கு
இடமளிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிராகவும் பொலிஸார் இப்போது
வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.
பொலிஸார் இத்தகைய குற்றச் செயல்களுக்கு 1,000, 500
அல்லது 3,000 ரூபாவை அபராதமாக நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொடுப் பதனால் அந்த
தண்டனையை துச்சமாக மதிக்கும் சில வாகன ஓட் டிகள் தண்டப்பணத்தை தூக்கியெறிந்துவிட்டு
மீண்டும் அதே குற்றச் செயலையே புரிகிறார்கள்.
எனவே, இந்த அவல நிலையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டுமாயின் வீதி விதிகளை
உதாசீனம் செய்து, வாகனங்களை ஓட்டி பாதசாரிகளை மட்டுமன்றி மற்ற வாகனங்களில்
உள்ளவர்களை யும் மரணிக்கச் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு எவ்வித தயவு தாட் சண்யமும்
காட்டாமல் நிறுத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு பதில் நேரடி கடுங்காவல்
சிறைத்தண்டனையை விதிப்பதுடன் அவர் களின் வாகனம் ஓட்டும் அனுமதிப்பத்திரங்களை
நிரந்தரமாக ரத்து செய்துவிட வேண்டும். இத்தகைய அச்சுறுத்தல் இருந்தால் மாத்தி ரமே
இலங்கையில் வீதி விபத்து மரணங்களை கணிசமான அள வுக்கு குறைக்கலாம்.
பாடசாலைகளுக்கு பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வேன்களும் இப்போது அங்கீகரிக்கப்பட்ட
வேகத்தைவிட மிதமிஞ்சிய வேகத்தில் செலுத்தப்படுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள்
கிடைத்திருக் கின்றன. இவர்கள் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தாங்கள்
செல்லும் பிரதேசத்தில் உள்ள பொலிஸாருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு தண்டனையில்
இருந்து தப்பித்துக் கொள்வ தாக அறிவிக்கப்படுகிறது.
எனவே, பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் நாம் வீதி விபத் துக்களுக்கான
பொறுப்பாளிகளாக கூண்டில் நிறுத்தி கண்டிக்கும் அதேவேளையில் தங்கள் கடமைகளை சட்டப்படி
செய்யத்தவறும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ்விதம் தண்டிக்கப்பட வேண்டும். சில
பொலிஸ் உத்தியோகத்தர்கள் செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்த அல்லது அரசியல்
செல்வாக்குடையவர்கள் மீதும் நடுநிலையாக நட ந்து அவர்கள் குற்றம் இழைத்திருந்தால்
தண்டிக்க வேண்டும்.
இவ்விதம் வீதி விபத்துக்களுக்கு பொறுப்பான இந்த மூன்று சாராரும் சட் டத்தையும், வீதி
விதிகளையும் மதித்து நடந்து கொண்டால் அப்பாவி உயிர்கள் வீதி விபத்துக்களினால்
பலியாகுவதை தவிர்த்துக் கொள்ள முடியும்.