ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 14
நந்தன வருடம் ஆடி மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY ,AUGUST, 03, 2012
வரு. 80 இல. 183

வரட்சியை காரணம் காட்டி தேர்தலில் விவசாயிகளை ஏமாற்ற ஐ.தே.க முயற்சி

* பாமர மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க ரணில்,
 ஜே.வி.பி முதலைக் கண்ணீர்

* முடிந்தால், ஐ.தே.க ஆட்சியில் முன்னெடுத்த விவசாயத்
 திட்டங்களை பகிரங்கமாகக் கூறட்டும்

வரட்சியைக் காரணம் காட்டி தேர்தலில் வெற்றி பெற கனவு காணும் ஐ. தே. க. விவசாயிகள் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவின் 2002 – 2004 ஆட்சியில் விவசாயிகளுக்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டத்தை கூறுமாறு சவால் விடுவதாக சு. க. செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

விவரம் »

போதைப்பொருள் தொல்லையை முழுமையாக சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக உரிய அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை வழங்குவேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழு ஜனாதிபதியுடன் நேற்று சந்திப்பு

வடக்கு, கிழக்கு சென்று நிலைமைகளை நேரில் ஆராயுமாறு பிரி. குழுவிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழுவினர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.இச்சந்திப்பு நேற்றுக் காலை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றதுடன் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் முதலீடுகள், வர்த்தகத்துறை மேம்பாடுகள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

விவரம் »


கல்முனைப் பிரதேசத்தில் மருதமுனைப் பகுதியில் பொலிஸார் தேர்தல் சுவரொட்டி களை அகற்றும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
(படம்: மருதமுனை தினகரன் நிருபர் பி.எம்.எம்.ஏ.காதர்)

கொகோஸ், கிறிஸ்மஸ் தீவுகளுக்கு 138 இலங்கையர்கள் சென்றடைவு

கரைக்கு நீந்திச் சென்று உதவி கோரியதாக ஆஸி. அதிகாரிகள் தகவல்

கடந்த இரு தினங்களில் 138 இலங்கையர்களுடன் மூன்று ஆழ்கடல் வள்ளங்கள் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் மற்றும் கொகோஸ் தீவுகளை சென்றடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய நேரப்படி புதன்கிழமை காலை 8.00 மணியளவில் 67 இலங்கைத் தமிழர்களுடன் கூடிய படகொன்று கொகோஸ் தீவை அண் மித்துள்ளது. கரைக்கு சுமார் 200 மீற்றர் தொலைவு இருந்தபோது 4 இலங்கை தமிழர்கள் கடலில் நீந்தி கரையை சென்றடைந்துள்ளனர்.

விவரம் »

 



பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழுவினர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடிய போது பிடிக்கப்பட்ட படம்.
(படம்: சுதத் சில்வா)