ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,JULY, 24, 2012
வரு. 80 இல. 173

அமைச்சர்கள் மாறினாலும் பொது தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது ஒருபோதும் நிறுத்தப்படக் கூடாது

அமைச்சர்கள் மாற்றம் பெற்றாலும் அரசாங்கம் மாறினாலும் பொதுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படு வது ஒருபோதும் நிறுத்தப்படக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நேற்று நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் அமைச்சர்கள், அரச அதிகாரிகளுக்கு இது தொடர்பில் வலியுறுத்திய ஜனாதிபதி, உரிய காலத்தில் அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்ய முடியாது போனால், அதனை நிறைவேற்றக்கூடிய அரச நிறுவனங்களுக்கு அதனைப் பொறுப்பேற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் நற்பெய ரையும் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சகலரும் செயற்ப டுவது முக்கியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவரம் »

1000 ரூபாவுக்கும் குறைவாக சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் அக்கொடுப்பனவை 1,000 ரூபாவினால் அதிகரிப்பேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இந்திய புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மஹிந்த வாழ்த்து

இந்தியாவின் 13வது ஜனாதிபதி யாக தெரிவு செய் யப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மலர்ச் செண்டுகளையும் அனுப்பி வைத்துள்ளார். நீண்ட காலமாக நிலைத்து நிற்கும் இந்திய - இலங்கை உறவுகள் மேலும் வலுவடைய பிரணாப்....

விவரம் »


 
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் உற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களை யானை ஆசீர்வதிக்கும் காட்சி.
(படம்: வீ.ரி.சகாதேவராஜா)

குற்றவாளிகளை கைது செய்வதில் அரசியல் அழுத்தங்களுக்கு இடமில்லை

குற்றம், ஊழல், தேசிய பாதுகாப்பு கருத்தரங்கில் பாதுகாப்பு செயலர் கோத்தாபய உரை

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களில் அதிகரிப்பு இல்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.பாரிய அலை போன்று குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்ற போதிலும் பொலிஸாரின் கணிப்பீட்டில் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்து செல்வது புலப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விவரம் »

 


 
தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்று நடந்த செயலமர்வில் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உரையாற்றுகிறார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவும் காணப்படுகிறார்.
(படம்: நிஸங்க விஜயரட்ன)