|
உனக்காக காத்திருப்பேன்
உனக்காக காத்திருப்பேன்
இதயத்தை கொள்ளையிட்ட காரிகையே
இன்னும் தான் பேசுதற்கு மறுக்கின்றாய்
உதயத்தை நோக்கிய சந்திரனும்
உனைக்கண்டு நாணமுற்று மறைந்ததுவே
கடிதத்தை தந்துவிட்ட சின்னவளே
கானல்வரி எழுதுதற்கு மறந்தனையோ
குடி முழுகிப் போனாலும் பரவாயில்ல
குதூகலமாய் வாழவைப்பேன் வாராயோ
உனைக்கண்ட நாளாக என்நெஞ்சம்
உணர்வற்று வேறாகிச் செல்கிறதே
எனையன்றி வேறொருவர் கிடைத்தாலும்
எப்படித்தான் உன் நினைவை இழந்திருப்பேன்
அடியற்ற மரம்போல கிடந்தாலும்
அனலிட்ட மெழுகுபோல் உருகினாலும்
விடியலுக்காய் உனக்காக காத்திருப்பேன்
வீண் பழிகள் சேராமல் காத்திடுவேன்.
மருதமுனை ஏ. எம். எம். பாறூக்
|