ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,JULY, 24, 2012
வரு. 80 இல. 173
 
மனிதனின் அச்ச வியாதியொன்று ஆய்வில் புதிதாக கண்டுபிடிப்பு

மனிதனின் அச்ச வியாதியொன்று ஆய்வில் புதிதாக கண்டுபிடிப்பு

னிதர்கள் பலரிடம் உள்ளதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட் டுள்ள ஒரு பயம் ‘காஸ்மோஃபோபியா’ என்பதாகும் சுண்டெலியில் இருந்து சுனாமி வரை இதனைப் பார்த்தாலும் உயிர் பதறி னால், அதுதான் காஸ்மோஃபோபியா. இவர்களால் நிம்மதியாகச் சாப்பிட முடியாது உறங்க முடியாது.

பயத்தைப் பற்றிய முதல் மருத்துவ ஆய்வுக்கு ‘லிட்டில் ஆல்பர்ட் பரிசோதனை’ என்று பெயர் - அதிக சத்தங்களைக் குழந்தைகள் கேட்கும் போது அவர்களுக்கு ஏற்படும் முதல் உணர்ச்சியே பயம்தான் என்பதையும், மற்றைய குழந்தைகள் பயப்படாத ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு ஒரு குழந்தையைப் பயமுறுத்தவும் முடியும் என்பதையும் இந்தப் பரிசோதனையின் மூலம் நிரூபித்தார் ஜோன் பி. வாட்ஸன் என்ற ஆய்வாளர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி