ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 21
நந்தன வருடம் ஆனி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JULY, 12, 2012
வரு. 80 இல. 163

ரோயல்பார்க் தொடர்மாடி சுவிஸ் யுவதி கொலை வழக்கு ;

எதிரியின் 12 வருட சிறைத் தண்டனை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதிப்பு

கொழும்பு, ராஜகிரிய ரோயல் பார்க் தொடர்மாடி வீட்டில் படுகொலை செய்ய ப்பட்ட சுவீடன் பிரஜையான இவோன் ஜோன்ஸ்டன் (வயது 19) என்ற யுவதியின் கொலை யாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி இடம்பெற்ற இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சமந்த ஜுட் அன்டணி ஜயமஹ என்ற நபருக்கு 12 வருட சிறைத்தண்டனையும், 50,000 ரூபா அபராதமும் விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.எனினும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனை போதுமானதாக இல்லையென மேல்.....

விவரம் »

அரச பேருந்து போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை ஒரேநாளில் செலுத்துவதையும், அவர்களுக்கு சீருடைகளை வழங்குவதையும் எனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதலாண்டில் நிறைவேற்றுவேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

வட மாகாணசபை தேர்தல் 2013இல்

தேர்தலுக்கான திட்டமிட்ட வேலைகள் துரிதமாக முன்னெடுப்பு

வட மாகாண சபைத் தேர்தல் இன்னும் ஓராண்டுக்குள் நடத்தப்படும். அனேகமாக நாம் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

விவரம் »


 பாடசாலை மாணவர்கள் ஊடாக டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த பேரணி நேற்று மொரட்டுவையில் நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட படம்.
(படம்: வாசித்த பட்டபெந்திகே)

திருமுறிகண்டியில் 18 குடும்பங்களும் இன்று சொந்தக்காணியில் மீள்குடியேற்றம்

காணிகள் அடையாளம் காணப்பட்டதால் முரண்பாடுகள் தீர்ந்தன

காணிகளை அடை யாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல் கார ணமாக முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் மீள்குடியமர்த்தப் படாத 18 குடும்பங்களையும் இன்று மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவி த்தார். இந்த 18 குடும்பங்க ளும் தமது சொந்தக் காணிகளிலேயே மீள்குடியமர்த்தப்படவிரு ப்பதாக அவர் குறிப் பிட்டார்.

விவரம் »


 உணவு பாதுகாப்பு குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (10) அலரி மாளிகையில் நடந்த போது ஜனாதிபதி விளக்கமளிக்கிறார். இந்நிகழ்வில் அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, ஆறுமுகம் தொண்டமான், பீ. தயாரத்ன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.பி. நாவின்ன, மஹிந்த யாப்பா அபேவர்தன உட்பட அமைச்சர்களின் செயலாளர்களும் காணப்படுகின்றனர்.
(படம்: சுதத் சில்வா)


 “டெங்கு நுளம்பின் அடுத்த இலக்கு நீங்களோ அன்றி உங்கள் பிள்ளைகளாகவோ அல்லது உறவினர்கள், நண்பர்களாகவோ இருக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.”
டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி