ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 15
நந்தன வருடம் ஆனி மாதம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY ,JULY, 06, 2012
வரு. 80 இல. 159

சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு
கடும் தண்டனை

கட்சிகளுடன் ஆலோசித்தே மரண தண்டனை பற்றி இறுதி முடிவு

பொலிஸார் பாரபட்சமற்று செயற்படுகின்றனர்

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நேற்று இதுபற்றி தெரிவித்த அமைச்சர்; பாலியல் துஷ்பிரயோகம், போதை வஸ்து விவகாரங்கள் தொடர்பில் கடுமையான தண்டனைகளை வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

விவரம் »

ஐ.தே.க. அரசாங்கத்தின் கீழ் இல்லாமல் செய்யப்பட்ட கிராம மட்டத்திலான விவசாய விரிவாக்கற் சேவையை மீண்டும் ஆரம்பிப்பேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பாராளுமன்றம் கூடும் தினங்களில் எம்.பிக்களுக்கு எதிரான வழக்குகளை மேற்கொள்ள வேண்டாம்

நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அறிவிக்க சபாநாயகர் பணிப்பு

பாராளுமன்றம் கூடும் தினங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாமென நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பணிப்புரை . . . . .

விவரம் »


இலங்கை, சீன ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 55 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டும், இலங்கை, சீன அரிசி, ரப்பர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை இட்டும் ஜுலை 10 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள விழா தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. சீன இலங்கை நட்புறவுச் சங்கத் தலைவர் ஆனந்த குணதிலக்க, சீனத் தூதுவராலய அரசியல் கவுன்சில் REN FAQIANG நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் சுமதி தர்மவர்த்தன மற்றும் பிரமுகர்களைக் காணலாம். (எப். எம்.)

பாராளுமன்ற அமர்வுகளில் எம். பிக்கள் கலந்துகொள்வது
மிக அவசியம்

“பங்குபற்றும் விபரங்களை
வெளியிட வேண்டும்”

சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற அமர்வுகளில் தவறாது கலந்து கொள்ளுவது மிக அவசியம் என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காது இருப்பது . . . . . .

விவரம் »


பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம் மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்துடன் இணைந்து உதைபந்தாட்ட பயிற்சி முகாமை இலங்கையில் நடத்தவுள்ளது. இது தொடர்பாக எயார் டெல் லங்கா நிறுவன அதிகாரிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்து ரீசேட் வழங்கினர். அருகில் நாமல் ராஜபக்ஷ எம்.பி உட்பட எயார்டெல் நிறுவன அதிகாரிகளும் காணப்படுகின்றனர்.


“சமூக பொறுப்பும் மற்றவர் பற்றிய கரிசனையும் டெங்கு நோயை தடுப்பதற்கு நீங்கள் வழங்கும் சிறந்த ஒத்துழைப்பாகும்”
டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி