ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் மாதம் பிறை 22
நந்தன வருடம் வைகாசி மாதம் 31ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY ,JUNE, 13, 2012
வரு. 80 இல. 139

வீதி விபத்துகளை தவிர்க்கும் விசேட திட்டம்:

வாகன சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறை டிசம்பரில் அமுல்

* மோட்டார் போ. வ. திணைக்களம் கணனிமயம்

* பொலிஸாருக்கு அறிவூட்டல்

* நாளொன்றுக்கு 8 பேர் உயிரிழப்பு

அதிகரித்து வரும் வீதி விபத்துகளை மட்டுப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட உள்ள சாரதிகளுக்கு புள்ளி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் முறை இந்த வருட முடிவுக்குள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதோடு பொலிஸாரும் அறிவூட்டப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கூறினார்.

விவரம் »

அரச ஊழியர்களைப் பாதுகாப்பதற்காக சம்பளத்தை அதிகரித்தல், வீடமைப்புத் தேவைகளை நிறைவு செய்தல், கடன் வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

கொச்சிக்கடை அந்தோனியார் திருவிழா இன்று

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.இன்று காலை திருவிழா திருப்பலி பூசைகள் நிறைவேற்றப்படுவதுடன் மாலை புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி வீதி வலம் வரும் நிகழ்வும் அதனையடுத்து இறுதி ஆசிர்வாதமும் இடம்பெற வுள்ளன.

விவரம் »

பாண்டிருப்பில் ஐஸ்கிaம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சைபெறும் சிறுவர்களை கல்முனை மேயர் சிராஸ் மீராசாகிபு பார்வையிடுகிறார். (படம்: எம்.ஐ.சம்சுதீன்)

அதிகாரிகளிடமிருந்து சமிக்ஞை கிடைத்தால் வடக்கில் தேர்தல்

தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தல் நடத்தக்கூடிய சூழல் உள்ளதென உரிய அதிகாரிகளிடமிருந்து சமிக்ஞை கிடைக்குமானால் வட மாகாண தேர்தலை நடத்த முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது குறித்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் கண்ணிவெடியகற்றல், மீள்குடியேற்றம் போன்ற காரணங்கள் வட மாகாணத்தின் சில பகுதிகளில் நிலவுவதாக அறிகிறேன்.

விவரம் »



ஸ்ரீலங்கா சுதந்திர தொழிற்சங்க அமைப்பின் மாவட்டக் குழுக் கூட்டம் மற்றும் விசேட நிறைவேற்றுக் குழுக் கூட்டங்கள் நேற்று (12) கொழும்பில் மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திர தொழிற்சங்க அமைப்பின் தலைவரும் மேல் மாகாண ஆளுநருமான அலவி மெளலானா, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பிரதித் தலைவர் உபாலி லியனகே உட்பட உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.