ஹிஜ்ரி வருடம் 1433 ரபீஉனில் அவ்வல் பிறை 04
கர வருடம் தை மாதம் 14ம் திகதி சனிக்கிழமை
SATURDAY ,JANUARY, 28, 2012
வரு. 80 இல. 22

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழு :

பரிந்துரைகள் முறைப்படி நடைமுறைப்படுத்தப்படும்

ஒரே நாளில் அமுல்படுத்துவது சாத்தியம் இல்லை

மொனராகலையில் ஜனாதிபதி

எத்தகைய தடைகள் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டாலும் மக்களுக்கான அபிவிருத்தியை ஒருபோதும் பின்போடப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரை களை ஒரே நாளில் நடைமுறைப்படுத்த முடியாது. 30 வருட பிரச்சினைகளுக்கு உடன டியாகத் தீர்வுகாண்பது கடினம் எனினும் முறைப்படி அவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவரம் »

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஏனைய கல்விச் சேவையில்
ஈடுபட்டுள்ள தொழில்துறையினரது நிலைமைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

64வது சுதந்திர தினம், தேசத்துக்கு
மகுடம் கண்காட்சி;

ரூ. 21 ஆயிரம் மில்லியன் செலவில் அபிவிருத்தி, ஏற்பாட்டு பணிகள்

64 ஆவது சுதந்திர தினம், தேசத்துக்கு மகுடம் கண்காட்சி மற்றும் அதனுடன் இணைந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு 21 ஆயிரம் மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலு வல்கள் அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.எமது நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாகக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப் பொருளில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் தலைமையில் இம்முறை சுதந்திர தின விழா மிக விமர்சையாக நடத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விவரம் »

2012ல் மேலும் 3 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம்

ஈரானிய உதவி, ஒத்துழைப்புகளை பெறவும் நடவடிக்கை

இந்த வருடத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சார வசதி அளிப்பதற்கான ஆயிரம் மின்சார திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது.இதற்காக ஈரான் அரசாங்கத்தின் கடனுதவி மற்றும் முதலீடுகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அமைச்சர் சம்பிக ரணவக்கவுக்கும் ஈரான் தூதுவர் எம். என். ஹசன் பூருக்குமிடையில் நேற்று (27) மின்சக்தி எரிசக்தி அமைச்சில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

விவரம் »

2012 இறுதிக்குள் மேலும் 3000 ஆசிரியர் நியமனம்

கொடுக்கப்படும் பாடசாலையில் கடமையாற்ற விரும்பாதோருக்கு நியமனம் வழங்கப்படமாட்டாது

இவ்வருட இறுதிக்குள் மேலும் 3000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங் கப்படும். அவர் களுக்கு பெற் றுக் கொடுக் கப்ப டும் பாடசாலை யில் கடமையாற்ற விருப்பம் தெரிவித்தால் மட்டுமே நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகிறன. இந்த நேர்முகப் பரீட்சையின் போது அவர்களுக்குரிய பாடசாலை பெற்றுக் கொடுக்கப்படும்.

விவரம் »



‘ரன்பிம’ திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காணி உறுதியினை வழங்குவதை படத்தில் காணலாம். (படம்: சுதத் சில்வா)